கீச்சுகள் – 29
எழுதியது ஈரோடு கதிர்
ஏற்கனவே தின்னுபோட்டு சும்மா கடனேனு கொறிக்க வர்றவங்களுக்கு தனியா பந்திபோடுங்கய்யா. பொசுக்னு இலைய மூடி நம்ம வயித்துல அடிக்கிறாங்க!
–
பாராளுமன்றம் நடந்தது, 24 மணி நேரம் மின் விநியோகம் இருந்தது என்பதையெல்லாம்இனி இத்துப்போன பழைய செய்தித்தாள்களில் மட்டுமே படிக்க இயலும்!
–
டெண்டுல்கர் பேட்டுக்கே அவ்ளோ பெரிய பந்து சிக்காத போது, நம்ம பேட்டுக்கு இவ்ளோசின்ன கொசு சிக்காதது ஒரு குத்தமா! # கொசு(Bat) ராக்ஸ்
–
ஏதோ ஒரு நொடியில் சூழும் வெறுமை, ஏதோ ஒரு நொடியில் விலகும். அது எந்த நொடிஎனத் தெரியாததுதான் வாழ்வின் அதிசுவாரசியம்!
–
ஜார்க்கண்டில் கொசுவுக்கு கோவில் கட்டி வழிபாடு # தப்பு பண்றவங்களை கடவுள் இனிகண்ணைக் குத்தமாட்டார் உடனே ’கடிப்பார்’!
–
பகல் நேரத்தில் மது அருந்தும் நண்பர்கள் மத்தியில் எதேச்சையாக இருப்பதும் ஒருவித’போதை’தான். ஆனாலும் எத்தனையெத்தனை உண்மைகள்! #அடேங்கப்பா
ஒவ்வொரு செடியும் மரமும் அறியும் தன்னில் பூக்கும் மலர், உதிரும் என்பதை!
–
கோபம் கொள்ளும் கணத்தில் மட்டும், கோபத்திற்கான காரணத்தை ஏனோ மனதுஇரட்டிப்பாக்கிக்கொள்ள துடிக்கிறது #ம்ம்ம்ம்… நல்லா வருவடா!
–
எல்லோரிடமும் கதை இருக்கின்றது. சிலருக்கு எழுதத் தெரிவதில்லை, பலருக்கு வாசிக்கத்தெரிவதில்லை!
–
ROFLனு போட்டு ”வுழுந்து பொரண்டு சிரிக்கிறவங்க” போட்டிருக்கிற துணியில புழுதிஆயிடாது!? # ரொம்போ நாளு டவுட்டு 🙂
–
ஒவ்வொரு மணி நேர முடிவிலும் ”இப்ப கரண்டு போய்ருமோ”னு பதட்டமா நினைச்சுநினைச்சே சீக்கிரம் மாரடைப்பு வந்துடும் போல இருக்கு
–
நேரமில்லை என்பதை ”மனம் இல்லை” என்றும் நிரப்பிக்கொள்ளலாம்!
–
எனக்கு கரப்பான் பூச்சியை பிடிக்காமல் போனதற்கு நேரிடைப் பகை ஏதுமில்லை.யார்யாரோ கரப்பான்பூச்சியை தங்களுக்குப் பிடிக்காது என்று சொன்னதாலும்
–
”நான் செய்வது மட்டுமே சரி” எனும் தவறை அடிக்கடி செய்கிறோம்.
–
”வரையறைகள்” மாறுதலுக்குட்பட்டவை.
–
மகிழ்ந்ததெல்லாம் மகிழ்ந்திருக்க வேண்டியதோ, வருந்தியதெல்லாம் வருந்தியிருக்கவேண்டியதோ அல்ல!
–
என்னையே நான் திருப்தி செய்திட இயலுவதில்லை, இதில் உங்களை……!!!! #ரொம்பதான்பேராசை உங்களுக்கு!
–
கிராமத்துல கரண்டு மட்டும்தான் இல்லைனு நினைக்காதீங்க…. ’கொசு’வும் சுத்தமாஇல்லை!
–
பேருந்துகளிலும், ரயிலிலும் பிதுங்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பெரு நகரங்கள்எவ்வளவு வீங்கியிருக்கின்றன என்பது புரிகிறது!
–
தடையில்லா மின்தடை! தடையில்லா டாஸ்மாக் சேவை!! வாழ்க எம்மண் வையத்துநாட்டிலெல்லாம்!
–
வரவர வீட்ல எதுனா பேசும்போதுகூட வீட்டில் உள்ளவங்க Like, Comment போடனும்னுதோண ஆரம்பிச்சிடுச்சு (கிடைப்பது பல்பு) – FB மேனியா #முத்தின நிலை
–
உண்மையச் சொல்லுங்க… நிஜமாவே பொருள் தேவைனு வாங்குறீங்ளா? இல்ல காசுஇருக்குதேனு வாங்குறீங்ளா?
–
பெல் அடிச்சா போன் எடுத்துடுறோம்னு போன் பண்ற டெலிமார்கெட்டிங் ஆளுங்களுக்குசவால் “தில் இருந்தா EB ஆபிஸ்கு போன் பண்ணி பேசிடு பார்க்கலாம்”
–
தூங்குறாங்னு தெரிஞ்சே எழுப்பி தூக்கமானு கேக்குற புத்திசாலித்தன கேள்வியை,பாதாளச்சாக்கடைக்கு தோண்டி இன்னும் மூடாதவங்ககிட்டே காட்டுங்களேன்!
–
ஒவ்வொரு முறையும் முதல் துளி ஞாபகத்தில் இருக்கிறது கடைசித்துளிஎதுவென்பதுதான் நினைவிலிருப்பதில்லை!
–
வெந்த சோத்தை திரும்பவும் சட்டியில் போட்டு வறுக்கிறதுக்குப் பேருதானே ஃபாஸ்ட் ஃபுட்!
–
ஒரு நிமிடம் என்பது குறுகியதாகவோ, நீண்டதாகவோ தோன்றுவதை கடிகாரம்தீர்மானிப்பதில்லை. மனதும், சூழலும்தான்!
–
உன்னைச் சொல்லாததை ”என்னைச் சொன்னியானு கேக்குற அளவுக்கும் சுறுசுறுப்பாஇருக்காதே” # முடியவே முடியலை! :))))
–
சோம்பேறியாக இரு. அது உன் விருப்பம். ஆனால் சோம்பேறி என்பதைக் கூட அறியமுடியாத அளவுக்கு சோம்பேறியாக இருக்காதே #முடியலத்துவம் 🙂
–
உங்க ஃபேக் ஐடி புரட்சிக்கு ஒரு அளவே இல்லையா? ”டெங்கு கொசு”னு கூட பேர்வைப்பீங்க!? :)))
–
இதோ இந்தக் காற்றை சுத்திகரித்த மரத்தை நான் வைக்கவில்லை.
–
தமிழ்நாட்ல ஏன் வேஷ்டிகளுக்கு இத்தனை விளம்பரம்?. இங்கு அந்தளவுக்கு சந்தைஇருக்கா என்ன!? # சீரியஸ் (ICU) டவுட்டு
–
சென்னைக்காரங்களை நினைக்கவே பொறாமையா இருக்கு. இப்ப மழை, கரண்ட்ரெண்டுமே அங்கேதான் அதிகம்! # லெக் தாதா
–
”அன்புள்ள” எனத் தொடங்கும் பிரபலங்கள் / அரசியல் கடிதங்களில் அன்பு இருப்பதில்லை #அவதானிப்பு!
–
பேருக்கு பின்னால சாதி/டிகிரிக்கு பதிலா ப்ளட்குரூப் போடுங்க. இரத்தக்காட்டேரிபோலடெங்கு ஊரெங்கும் இரத்தவெறில திரியுது
–
ஒன்றைப் புரிந்துகொள்ள முதலில் அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்!
–
பொழுதுகளை தூசி தட்டி! புதுசு படுத்தித்தரும் வல்லமை குழந்தைகளுக்கான வரம்!
–
மிளகை கண்டுபிடிச்சது யாராகவோ இருக்கலாம், ஆனா காய்ந்த பப்பாளி விதையை மிளகுஎன மாற்றியது ஒரு அயோக்கிய களவாணியாத்தான் இருக்கனும்!
–
எல்லாமே பரிசுதான். சிலது நாம் வேண்டியது. பலது அவர்களிடம் மிஞ்சியது!